Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள்: ... சபரிமலையில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு: தேவசம்போர்டு முடிவு! சபரிமலையில் நடை திறந்திருக்கும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் முதல் நாளிலேயே அலை மோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 நவ
2014
11:11

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ’மண்டல காலம்’ தொடங்கியது. மண்டல காலத்தின் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜைகள் ஒரு ’மண்டல காலம்’ என அழைக்கப்படுகிறது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை 4 மணிக்கு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதுடன், இந்த ஆண்டுக்கான ’மண்டல காலம்’ தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின், கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18-ம் படியேறுவதற்கான ’கியூ’ சரங்குத்தியை கடந்து காணப்பட்டது. இதனால் 3 மணி நேரம் ’கியூ’ வில் நின்றுதான் தரிசனம் நடத்த முடிந்தது. சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீசார் சிரமப்பட்டனர். நெய் அபிஷேகத்துக்கும் நீண்ட ’கியூ’ காணப்பட்டது. நேற்று காலை நடை திறந்த போது கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர் சுபாஷ்வாசு, கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் உள்ளிட்டோர் சன்னிதானத்தில் இருந்தனர். பின், சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் ’புண்ணியனம் பூங்காவனம்’ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். சன்னிதானத்தில் ஸ்ரீகோயிலின் வலது புறம், நிர்வாக அலுவலகத்தின் எதிரில் புதிதாக துலாபார தராசு அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைத்தார். தந்திரி கண்டரரு ராஜீவரரு குத்துவிளக்கேற்றினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar