பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. பண்ருட்டி திருவ திகை சரநாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேய சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு துவங்கி மதியம் 1:00 மணிவரை நடந்தது. மீண்டும் பிற்பகல் 4:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை நடந்தது.