மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) உறவினரால் உதவி உடல்நலனில் கவனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 05:12
நல்லதையே நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் டிச.23க்கு பிறகு புதனும், 30க்கு பிறகு சுக்கிரனும் நற்பலனை வழங்குவர். சனியால் நன்மை தொடரும். குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுகிறார். இதனால், ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறி மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது மனக்கசப்பு ஏற்படலாம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஜன. 2க்கு பிறகு செவ்வாயால் முயற்சியில் தோல்வி உண்டாகும். பொருள் நஷ்டம் வரலாம். ஆரோக்கியம் குறையலாம். பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
தொழில், வியாபாரத்தில் அலைச்சலை சந்திக்க வேண்டியதுஇருக்கும். பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. அரசாங்க வகையில் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். டிச. 20,21ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்கள் குருவின் பலத்தால் நற்பலன் கிடைக்கப் பெறுவர். பணிச்சுமை பெருமளவு குறையும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கையும் நிறைவேறும். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை டிச. 30க்கு பிறகு மறையும்.
கலைஞர்களுக்கு டிச. 30க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டிஇருக்கும்.
மாணவர்கள் டிச. 23க்கு பிறகு கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்கள் ஆலோனைப்படி பின்பற்றினால் மேலும் முன்னேற்றம் கிடைக்கும்.
விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி வகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடாமல் போகலாம்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து போகவும்.