பதிவு செய்த நாள்
26
டிச
2014
11:12
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீழைநாடுகளின் லுார்துஎன, அழைக்கப்படும் வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பாடல் திருப்பலி நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிநேற்று அதிகாலை, 1:30 மணி வரை நடந்தது.தேவாலய அதிபர் மைக்கேல் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடந்தன. நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு திருப்பலி யில் கலந்து கொண்டனர்.