பதிவு செய்த நாள்
29
டிச
2014
11:12
ஊட்டி:நீலகிரி, தோடர் இன பழங்குடியின மக்கள், மொற்பர்த் என்ற பெயரில் பாரம்பரிய பண்டிகையை கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில், தோடரினத்தவர் வசிக்கும் பகுதி, மந்து என, அழைக்கப்படுகிறது. இவர்கள் ஆண்டுதோறும், மொற்பர்த் என்ற பெயரில், பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, தோடரினத்தவரின் தலைமை இடமான, முத்தநாடு மந்தில் உள்ள ஒர்ய்யல்வோ, மூன்போ என்ற கோவில்களில், நேற்று மொற்பர்த் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில், 67 மந்துகளைச் சேர்ந்த தோடர் இனத்தவர், பாரம்பரிய உடையணிந்து விழாவில் பங்கேற்றனர். சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பாரம்பரிய உடையணிந்து, இசைக் கருவிகளை இசைத்தபடி, பாடி, ஆடி விழாவை கொண்டாடினர். இளைஞர்கள், இளவட்ட கல் துாக்கி உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.