மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று மாசி மாத கிருத்திகை விழா நடந்தது. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. பகல் 12 மணிக்கு நடந்த மகா தீபாரதனைக்கு பின், மூலவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் ஒரு மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மலைக்கோவில் வளாகத்தில்பெண்கள் பொங்கல் வைத்து படைத்தனர். இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு நடந்த உற்சவர் கிரிவலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20 பட்ட செய்திருந்தார்.