நாகை மூகாம்பிகை கோவில் பிரம்மோற்சவ விழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2015 11:03
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப்பெற்ற தாய் மூகாம்பிகை கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகை,ஆரியநாட்டுத் தெருவில் அமைந்துள்ளது பழமையான தாய் மூகாம்பிகை கோவில்.பிரசித்திப் பெற்ற இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா,நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கோவிலில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு,ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதையடுத்து அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய நிகழ்ச்சியாக வரும் 4 ம் தேதி திருத்தேரோட்டம் விழா நடக்கிறது.