பெங்களூர் பிருந்தாவனில் அதிருத்ர மகா யக்ஞம் தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2015 01:03
பெங்களூர் : பெங்களூர் பிருந்தாவன், சாயி ரமேஷ் ஹாலில் நேற்று அதிருத்ர மகாயக்ஞம் துவங்கியது. அதிருத்ர மகாயக்ஞம் என்பது, பாவங்களை தீர்க்கும் வல்லமை கொண்ட வழிபாட்டு முறை.
சிவனுக்குரிய வழிபாட்டு முறைகளில் மிகச்சிறந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரில் இந்த யக்ஞம் நேற்று துவங்கியது. ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். சென்னையிலும், புட்டபர்த்தியிலும் பகவான் சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த யாகம் நேற்று (மார்ச் 1 ல்) துவங்கி, பெங்களூர், பிருந்தாவன் சாயி ரமேஷ் ஹாலில் மார்ச் 12ம் தேதி வரை நடைபெருகிறது.