வறண்ட தெப்பக்குளத்தில் வலம் வந்த சுந்தரராஜ பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2015 11:03
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு பொய்கைகரைப்பட்டி வந்த சுந்தரராஜ பெருமாளுக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். 11 மணிக்கு தண்ணீர் இல்லாத தெப்பத்தை வலம் வந்தார். பின் அங்குள்ள மண்டபத்தில் மாலை வரை எழுந்தருளினார். பல்வேறு ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஏன் தண்ணீர் இல்லை: இத்தெப்பத்திற்கு அழகர்கோவில் மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீர் வரும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி, பல வாய்க்கால்கள் காணாமல் போய்விட்டன. இந்த ஆண்டு மலைப் பகுதியில் போதுமான மழை பெய்தும் தெப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் தண்ணீர் இல்லாத தெப்பத்தையே சுற்றிவருகிறார். அடுத்தாண்டாவது வாய்க்கால்களை துார்வாரியோ, கள்ளந்திரி கால்வாயில் வரும் தண்ணீரை மோட்டார் மூலமோ நிரப்பியோ விழாவை நடந்த வேண்டும்.