பதிவு செய்த நாள்
30
மார்
2015
10:03
பெங்களூரு: சிவாஜி நகர் தண்டு மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை, சண்டி மஹாயாகம் இன்று துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூரு, சிவாஜி நகர் தண்டு மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சண்டி மஹாயாகம் நடந்து வருகிறது. லட்சார்ச்சனை நடத்தப்படுவதால், குடும்ப கஷ்டம், சிரமங்கள் பனி போன்று கரைந்து விடும். தீராத நோய்களும் தீர்ந்து விடும். வியாபாரம் பெருகும். மனதில் தன்னம்பிக்கை வளர்ந்து, வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இத்தகைய சிறப்பு மிக்க, 55வது ஆண்டு லட்சார்ச்சனை, சண்டி மஹாயாகம் இன்று துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. இன்று துவங்கும் லட்சார்ச்சனை, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று கணபதி பூஜை, புண்யாக வசனம், ஆராதனைக்கு பின், காலை, 9:00 மணியிலிருந்து, பகல், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணியிலிருந்து, இரவு, 7:00 மணி வரையிலும், பகல், 12:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கின்றன. பகல், 12:00 மணிக்கும், இரவு, 8:00 மணிக்கும் மஹா மங்களார்த்திக்கு பின், தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. வரும், 3ம் தேதி சண்டி மஹாயாகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, கணபதி பூஜை, புண்யாக வசனம், 8:30 மணிக்கு, சண்டி ஹோமம் துவங்குகிறது. பகல் 12:30 மணிக்கு, பூர்ணாஹுதி, 1.00 மணிக்கு, மஹா மங்களார்த்தி, 1:30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன.விழா நாட்களில், சப்தஸதி பாராயணம், ஸ்ரீசக்ர அர்ச்சனை, ஸ்ரீசக்ர ஹோமம் நடக்கின்றன. தினமும் காலை, 10:30 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் நடக்கிறது.