Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மன் கோவிலில் சண்டி ... அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்! அதிகார நந்தி வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களின் தொட்டுத் தொடரும் நேர்த்திக்கடன் அருவா!
எழுத்தின் அளவு:
கோயில்களின் தொட்டுத் தொடரும் நேர்த்திக்கடன் அருவா!

பதிவு செய்த நாள்

30 மார்
2015
11:03

திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருவா தயாரிப்பிற்கு புகழ்பெற்றது. பல்வேறு பிரச்னைகளால் தயாரிப்பு குறைந்தாலும் கோயில்களுக்குச் செலுத்தும் நேர்த்திக்கடன் அருவா தயாரிப்பு இன்றும் தொடர்கிறது. திருப்பாச்சேத்தியில் பாரத் என்ற தொழிலாளி சக தொழிலாளர்களுடன் 18 அடி உயரத்தில் நேர்த்திக்கடன் அருவா தயாரித்துள்ளார்.அரிவாள் தயாரிப்பு குறித்து பாரத் கூறுகையில் ; மண்வெட்டி, கோடாரி, அரிவாள், கதிர் அரிவாள் உள்பட பல்வேறு விவசாய கருவிகள் தயாரித்து வந்தோம். நாளடைவில் இயந்திரமயமாகி விட்டதால் விவசாய கருவிகளின் பயன்பாடு குறைந்து விட்டது. தற்போது மாரநாடு கருப்பண்ணசாமி, மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆண்டாண்டு காலமாக நேர்த்திக்கடன் அருவா தயாரித்து வருகிறோம். அடிக்கு ஆயிரத்து 500 ரூபாய் என பக்தர்களின் வேண்டுகோளின் படி அருவா தயாரித்து தருகிறோம். 18 அடி உயர அருவா தயாரிக்க குறைந்தது 20 நாட்களாகும். மதுரையில் இருந்து இரும்பு பட்டைகளை வாங்கி தயாரிக்கிறோம். கைப்பிடி மட்டும் இரண்டரை அடி நீளம் இருக்கும். அருவா, கைப்பிடிகளில் பெயின்ட் அடித்து வெண்கல மணி பொருத்தி தருகிறோம், என்றார்.சென்னை பக்தர் மணிகண்டன் கூறுகையில்; ஐந்து ஆண்டுகளாக மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயரத்தில் அருவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகிறேன். தென் தமிழகத்தில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி வேண்டும் வரம் தருபவர் என்பதால், தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: நடுமலை எஸ்டேட் பூமாரியம்மன் கோவிலில், முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக ... மேலும்
 
temple news
வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.உடுமலை மாரியம்மன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று(ஜன.28) ... மேலும்
 
temple news
திருவாடானை: முகூர்த்த நாளில் திருவாடானை கோயில் முன்பு குவிந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar