பறவை என்றாலே சுதந்திரமாகப் பறப்பது தான். பறவையைக் கூண்டில் அடைப்பதற்காக, இறக்கையை வெட்டுவது பாவம் தானே! மாண்டவ்யர் என்னும் மகரிஷி, ஒரு பூச்சிக்கு செய்த இம்சையால் பல ஆண்டுகள் துன்பப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. எல்லா உயிர்களையும் சுதந்திரமாக வாழ விடுவது நம் கடமை.