பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
12:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று வாஸ்து (ஏப்.,20) சாந்தியுடன் துவங்கி மே 2 வரை நடக்கிறது.
அதன் விபரம்:
ஏப்.,21: காலை 11.30 முதல் பிற்பகல் 12.30 மணிக்குள் கொடியேற்றம்.
ஏப்.,22: காலை 7 மணிக்கு கோயில் முத்துராமய்யர் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல்.
பூதம், அன்ன வாகனத்தில் நான்கு மாசிவீதிகளில் பக்தி உலா.
ஏப்.,23: காலை 7 மணிக்கு கோயில் கல்யாண சுந்தரமுதலியார் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு கைலாசபர்வதம், காமதேனு வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,24: காலை 9 மணிக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல்.
ஏப்.,25: காலை 9 மணிக்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா.
ஏப்.,26: காலை 7.30 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா. தங்க ரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,27: காலை 8 மணிக்கு கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு சுவாமி,
அம்மன் பகல் 12 மணிக்கு எழுந்தருளல். இரவு 7 மணிக்கு நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் நான்கு மாசி
வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,28: இரவு 7.36 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ’பட்டாபிஷேகம்’. பின், அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் விழா.
ஏப்.,29: காலை 8 மணிக்கு மரவர்ணச் சப்பரத்தில் கோயில் சிவகங்கைராஜா மண்டகப்படியில் எழுந்தருளல். மாலை 6 மணிக்கு இந்திரவிமானத்தில் நான்கு மாசிவீதிகளில் பக்தி உலா.
ஏப்.,30: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் காலை 6 மணிக்கு எழுந்தருளல். திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
மே 1: காலை 6.30 மணிக்கு திருத்தேரில் நான்கு மாசிவீதிகளில் தேரோட்டம்.
மே 2: கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.