Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் ... அருணாச்சலேஸ்வரர் கோவில் வசந்த உற்சவம் துவக்கம்! அருணாச்சலேஸ்வரர் கோவில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்: மணப்பாறையில் வினோதம்!
எழுத்தின் அளவு:
மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்: மணப்பாறையில் வினோதம்!

பதிவு செய்த நாள்

23 ஏப்
2015
10:04

மணப்பாறை: மணப்பாறை அருகே, எம்.சீத்தப்பட்டி கிராம மக்கள், மழை வேண்டி, பஞ்ச கல்யாணி திருமணம் செய்து, அறுசுவை விருந்து வைத்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, எம்.சீத்தப்பட்டி கிராம மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். கடந்த, மூன்றாண்டுகளுக்கும் மேலாக, மழையில்லாததால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. பல்லாயிரக்கணக்கான தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பல வகையான மரங்கள் மழையின்றி காய்ந்து விட்டன. இதனால், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கின. கிராம மக்கள், வேறு தொழில்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, காசு கொடுத்து, குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பஞ்ச கல்யாணி திருமண விழா என, பத்திரிகை அச்சிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்தனர். திருமணத்திற்கான தாலி, புடவை, வேட்டி, துண்டு, மாலை ஆகியவைகளை பொதுமக்கள் வாங்கி வந்தனர். சீத்தப்பட்டி மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்களின் முன், பஞ்சகல்யாணி திருமணத்துக்காக பந்தல் அமைத்திருந்தனர். நேற்று காலை, ஆண் பெண் கழுதைகளுக்கு, பொதுமக்கள் முன், திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த வர்கள் அனைவரும் மொய் கொடுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar