Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வைத்திய வீரராகவப் ... குன்றத்துார் சேக்கிழார் கோவிலில் பிப்., 11ல் மஹா கும்பாபிஷேகம் குன்றத்துார் சேக்கிழார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்தன்று பக்தர்கள், பழநி மலைக்கோயில் செல்லும் பாதை மாற்றம்
எழுத்தின் அளவு:
தைப்பூசத்தன்று பக்தர்கள், பழநி மலைக்கோயில் செல்லும் பாதை மாற்றம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2026
10:01

பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பழநி தைப்பூசத்திற்கு பாதுயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிப்., 1 தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழநி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய ஏற்ற வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் நிறுத்த கட்டணமில்லாத 13 பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் உள்ளூர் டவுன் பஸ்கள் வந்து செல்ல தற்போது பயன்படுத்தி வரும் பஸ் ஸ்டாண்ட் செயல்பட உள்ளது. மேலும் பழநி நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வசதி இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. அதற்கான பாதை மாற்றம் செய்யப்படவுள்ளது.


மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கடந்த ஆண்டு, தேவர் சிலை, திருஆவினன்குடி, சன்னதி ரோடு, பாத விநாயகர் கோயில் குடமுழுக்கு மண்டபம் என மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை இருந்தது. இதில் கடந்த ஆண்டு சன்னதி வீதியில் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி சிலர் மயக்கமடைந்தனர். இந்த ஆண்டு பக்தர்களின் வரிசை கிரிவீதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோப் கார் நிலைய அருகில் இருந்து துவங்கும் பக்தர் மலைக்கோயில் செல்லும் வரிசை வரிசை துவங்கி குடமுழுக்கு மண்டபம் வரை கிழக்கு கிரி வீதி, வடக்கு கிரி வீதியில் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் அய்யம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, ஆண்டவர் பூங்கா ரோடு, கொடைக்கானல் ரோடு இணைப்பு சாலை, ஆகியவற்றின் மூலம் கிரிவீதியை அடைந்து வரிசையில் இணைந்து கொள்ளலாம். இதனால் சன்னதி வீதியில் பக்தர்கள் தேக்கம் அடைவது ஏற்படாத நிலை ஏற்படும். அதேபோல் பக்தர்கள் மலைக்கோயில் இருந்து கீழே இறங்கியவுடன் பாதவிநாயகர் கோயிலில் இருந்து அய்யம்புள்ளி ரோடு, சன்னதி ரோடு, ஆகியவற்றில் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்லலாம். கிரிவீதியில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட,மருத்துவ அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிவீதியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
திருப்பத்துார்: திருப்பத்துார், தனியார் கல்லுாரியின், தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி, ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar