காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் சைவ கோவில்களில் கச்சபேஸ்வரர் கோவிலும் ஒன்று.இக்கோவில் பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டு உற்சவம், நேற்று காலை, 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் உற்சவர் கச்சபேஸ்வரர், சுந்தராம்பிகையுடன் சப்பர வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதிகளில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று இரவு, கச்சபேஸ்வரர் சிம்ம வாகனத்தில் ராஜவீதிகளில் பவனி வந்தார்.