விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரமாற்சவ விழா நடந்தது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் கடந்த 23ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. நேற்றிரவு நான்காவது நாளாக, இரவு 7:00 மணிக்கு நகர பிராமணர் சமூகம் சார்பில் கைலாசநாதர், பார்வதி தாயாரோடு நாக வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏற்படுகளை அப்பகுதி பொது மக்கள் செய்திருந்தனர்.