புதுச்சேரி: திப்ராயப்பேட்டை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 5:00 அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் முடிந்து, 10:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இன்று (6ம் தேதி) சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரம், 7ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 8ம் தேதி காலை மகா அபிஷேகத்தை தொடர்ந்து, மாலை 2:30 மணிக்கு செடல் உற்சவம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நிறைவு நாளான 9ம் தேதி மஞ்சள் நீராட்டு, இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை திப்ராயப்பேட்டை அத்திலியர் சாந்தி பகுதி பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.