திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2015 10:05
மேலுார் : திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழா மே 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாரில் எழுந்தருளினார். இது மாம்பழ சீசன் என்பதால் மேலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விழாவில் மாம்பழங்களை சூறை விடுவதால் மாங்கொட்டை திருவிழா என்றழைக்கப்படுகிறது. மே 30ல் திருக்கல்யாணம், மே 31ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை பேஸ்கார் வெங்கடேசன் மற்றும் கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.