ஸ்ரீ உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2015 05:05
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் ஸ்ரீ உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ தேஹசௌந்தரி சமேத உமா மஹேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.இங்கு நடராஜர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக் கு அருள்பாலித்து வருகிறார். தேவார பாடல் பெற்ற இந்த கோயிலுக்கு சோழ மன்னர்கள் பலர் திருப்ப ணிகள் செய்துள்ளனர்.
இத்தகைய சிறப்புவாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நேற்று கா லை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 25 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது. 4ம் நாளான நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் பூர்னாஹூதி, மகா தீ பாரதனையுடன் முடிந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயில் விமானத் தை அடைந்தது.அதனையடுத்து 9.10 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.
தொடர்ந்து சுவாமி,அம்பாள், நடராஜர் மற்றும் பரிகார மூர் த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திருப்பனந்ததாள் காசி மடத்து அதிபர் முத்துக்கு மரசுவாமி தம்பிரான் சுவாமிகள்,திருவாவடுதுறை ஆதின கட்டளை விசாரணை சுப்பிரமணிய தம்பிரா ன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் பூம்புகார் எம்.எல்.எ. பவுன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்த னர்.கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆனையர் மாரியப்பன் மற்றும் ஆலய கைங்கர்ய மற்றும் சாரிடபில் டிரஸ்டிகள் செய்திருந்தனர். பாலையூர் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.