பதிவு செய்த நாள்
14
ஜூலை
2015
12:07
சவாலை துணிவுடன் எதிர்கொள்ளும் கடக ராசி அன்பர்களே!
கேது, குருவால் தொடர்ந்து நற்பலன் எதிர்பார்க்கலாம். சனி, ராகுவின் பாதிப்புகளை குரு உடைத்தெறிவார். சுக்கிரன் ஜூலை 18-ந் தேதி வக்ரம் அடைந்தாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஆக. 1 வரை உங்கள் ராசியில் இருந்து பிரச்னை ஏற்படுத்தலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். அதன் பின் புதன் ராசிக்கு 2ல் மாறுவதால் வீண் கவலை ஏற்படலாம். சுக்கிரனால் பொருளாதார வளம் சிறக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூட தாமதம் ஆகலாம். ஆனால் அதுவும் நன்மையாகவே முடியும்.
தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. குரு சாதகமான இடத்தில் இருப்பதால் சிறப்பான நிலையைக் காணலாம்.
விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் விளைச்சல் பெருகும். கால்நடை மூலமும் வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம்.
பெண்கள் குதுõகலமாக இருப்பர். ஆனால் மாத முற்பகுதியில் உறவினர்களால் பிரச்னை நேரலாம். ஜூலை 21,22,23ம் தேதிகளில் ஆடம்பர பொருள் வாங்கலாம்.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 21, 22, 23, 31 ஆக. 1, 6, 7, 8, 9, 13, 14
கவன நாள்: ஆக. 2, 3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3 நிறம்: மஞ்சள் , வெள்ளை
பரிகாரம்: ஆதரவற்றோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ராமர் வழிபாடு வளர்ச்சி தரும். தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள்.முருகன் கோவிலுக்கு செல்லுங்கள்.