ராசிநாதனான சனி,சுக்கிரன் இருவரும் நன்மை தருவர். கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். கடவுளின் கருணை முழுமையாக கிடைக்கும். செவ்வாய் ஜூலை 31-ந் தேதி வரையும் புதன்அதன் பிறகும் வெற்றி வழங்குவர். மாதம் முழுவதும் சுபச்செலவு நிறைந்து காணப்படும்.குடும்பத்தில் வசதி பெருகும். புதனால் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். ஆக. 1க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆடை, அணி கலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். சூரியனால் அலைச்சல் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் ஜூலை 31 வரை பொருளாதார வளம் சிறக்கும். பகைவர் தொல்லை மறையும். அதன் பிறகு எதிரிகளால் பிரச்னை உருவாகலாம். புதிய வியாபாரத்திற்காக அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பாராத வகையில் பண வரவுக்கு வாய்ப்பு இருக்கிறது பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். பொருளாதார வளத்தில் குறைவிருக்காது.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. ஆக. 1க்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நற்பெயர் எடுப்பர்.
விவசாயிகள் நல்ல மகசூல் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். கால்நடை மூலம் ஜூலை 31ந்தேதி வரை நல்ல பலனை காணலாம்.
பெண்கள் சிறப்பான பலன் காணலாம். குடும்பத்தோடு யாத்திரை செல்வீர்கள். பிறந்த வீட்டு சீதனம் கிடைக்கலாம்.