பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
10:07
திருப்போரூர்: நெல்லிகுப்பம், வேண்டவராசி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், ஆடி உற்சவம் கோலாகலமாக நடந்தது.திருப்போரூர் அடுத்த, நெல்லிகுப்பம் கிராமத்தில், வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடி உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அன்று காலை 4:00 மணிக்கு, மங்கள இசை முழங்கி, 6:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. அதைத்தொடர்ந்து, திருக்குளத்திலிருந்து, கங்கை தீர்த்தம் மற்றும் 306 பால்குடங்கள் கொண்டு சென்று, காலை, 10:00 மணிக்கு, உற்சவ அம்மனுக்கு, மகா அபிஷேகம் நடந்தது.பிற்பகல் 1:00 மணிக்கு, கூட்டு வழிபாடு; தீபாராதனை; மாலை 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை; மாலை 6:00 மணிக்கு, சமர்ப்பணம் நிகழ்ச்சி; இரவு 7:00 மணிக்கு, பரத நாட்டியம்; இரவு 9:00 மணிக்கு, கிராமிய கலை நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.