பதிவு செய்த நாள்
01
ஆக
2015
11:08
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக ஜூலை 23ல் கொடியேற்றப்பட்டு, தினமும் சுந்தரராஜப்பெருமாள் அன்னம், சிம்மம், சேஷ, கருட, அனுமன், யானை, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்தார். ஜூலை 28 ல் இரவு ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியும், நேற்று காலை 10.15 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்தார். பக்தர்கள் "கோவிந்தா கோஷம் முழங்க வடம் இழுத்து வந்தனர். தேர் மதியம் 1 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் ஆடி வீதிகளில் மலர் தூவி, தேங்காய் உடைத்து பெருமாளை வரவேற்றனர். இரவு பெருமாள் முத்து பல்லக்கில் சயன கோலத்தில் வீதிவலம் வந்தார். இன்று காலை தீர்த்த வாரி நடக்கிறது. இரவு கொடி யிறக்கத்துடன் விழா நிறை வடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாக நாதன், கங்காதரன், கண்ணன் செய்திருந்தனர்.
* பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி 3 ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று மூலவர் மற்றும் உற்சவருக்கு பாலாபி ஷேகம் நடந்தது. பெண்கள் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கினர்.
* நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு அதிகாலை பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். கொளுவூர் ஆதிநாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.