பதிவு செய்த நாள்
17
ஆக
2015
03:08
குரு பகவானை உச்சமாக கொண்ட கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் குரு, ராகு, சுக்கிரன் ஆகியோரின் நற்பலன்கள் தொடரும். இதனால் செயல்பாட்டில் அனுகூலம் ஏற்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். ஆக. 24ல் சுக்கிரன் வக்கிரம் அடைவதால் பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். ஆக. 21க்கு பிறகு அரசு வகையில் பிரச்னை வரலாம் என்பதால், கணக்குவழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும். திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செப்டம்பர்2,3,4ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும். ஆக. 21க்கு பிறகு அரசு
ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு அரசு” வகையில் விருது கிடைக்கலாம். பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.
அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குரு பக்க பலமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயம் சிறப்படையும். கிழங்கு, நிலக்கடலை, மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும். பசுவின் மூலம் வருவாய் பெறலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களுக்கு நகை, புத்தாடை மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உண்டு. பொருளாதார வளம் மேம்படும். நற்சுகம் ஏற்படும்.
நல்ல நாள்: ஆக. 18, 19, 27, 28, செப். 2, 3, 4, 5, 6, 9, 10, 14, 15.
கவனநாள்: ஆக. 29, 30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7. நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்தால் தைரியம் அதிகரிக்கும். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.