பதிவு செய்த நாள்
28
ஆக
2015
11:08
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் அவதார தின விழா, இன்று (28ம் தேதி) துவங்குகிறது. முதலியார்பேட்டையில் உள்ள, வன்னிய பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு, லட்சுமி ஹயக்ரீவர் அவதார தின மகோற்சவம் இன்று (28 ம் தேதி) ஹயக்ரீவர் ஜெயந்தியுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, காலை 10:30 மணிக்கு, வித்யா லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு திரு மஞ்சனமும், தீபாராதனையும் நடக்கிறது. நாளை (29ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, ஹயக்ரீவ ஹோமம், நல்லறிவு ஏற்பட மல்லிகை, முல்லை அர்ச்சனையும், 30ம் தேதி, தாமரை மலர் அர்ச்சனை, 31ம் தேதி, திருத்துழாய் அர்ச்சனை, 1ம் தேதி, செவ்வலரி பூக்கள் அர்ச்சனை, 2ம் தேதி, மஞ்சள் சாமந்தி பூக்கள் அர்ச்சனையும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் விழாக் குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.