Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்! முதலியார்பேட்டையில் லட்சுமி ஹயக்ரீவர் அவதார தின விழா! முதலியார்பேட்டையில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணவனே கண்கண்ட தெய்வம்.. இன்று வரலட்சுமி விரதம்!
எழுத்தின் அளவு:
கணவனே கண்கண்ட தெய்வம்.. இன்று வரலட்சுமி விரதம்!

பதிவு செய்த நாள்

28 ஆக
2015
10:08

திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு பல வரங்களைத் தருபவள். வரங்கள் தருவதால் அவள் வரலட்சுமி என்னும் திருநாமம் பெறுகிறாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை விரும்பாதவர்களே இல்லை. துறவியான ஆதிசங்கரர் கூட, தனக்கு நெல்லிக்கனியை பிச்சையாக அளித்த பெண்மணிக்காக கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, லட்சுமியை வரவழைத்தார்.கிருஷ்ணனைக் காண குசேலர் வந்த போது, அவர் கொண்டு வந்த அவலை வாயில் போட்டார். குசேலருக்கு அன்றைய நிலையில் பொருள் தேவைப்பட்டது. தன் கணவரிடம் பொருள் நாடி வந்து உள்ளதை அறியாதவளா என்ன மகாலட்சுமி. உடனே தன் கடைக்கண் பார்வையில் குசேலர் வசித்த கிராமம் இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மிணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாக பிறந்த போது, தன் கணவருடன் காட்டிற்கு சென்றாள்.

கணவனே கண்கண்ட தெய்வமென அவரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்தை லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்திலேயே குடியிருப்பதாக ஐதீகம்.கணவனை விட்டு பிரியாதவர்களே சுமங்கலிகள். லட்சுமி தாயார் எப்படி திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருக்கிறாளோ, அதுபோல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை அனுஷ்டிக்கிறார்கள். இந்த இனிய நாளில், எல்லாரும் தீர்க்க சுமங்கலிகளாக வாழ லட்சுமி தாயாரை வேண்டுவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா சென்று, கோலாகல உத்சவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 
temple news
வடமதுரை; பிரம்ம கமலம் பூத்ததையடுத்து வடமதுரை அண்ணா நகர் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar