பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் வரதராஜப்பெருமாள் காலையில் சப்பரத்திலும் இரவு 7 மணிக்குமேல் அனுமார், கருடர், குதிரை, சேஷம் போன்ற வாகனங்களில் திருவுலா வருகிறார். ஆக.30ல் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு பெருமாள் திருத்தேரேற்றம் செய்யப்பட்டு காலை 8.50 மணிக்கு முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு 7 மணிக்கும் வரதராஜப்பெருமாள் சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 10 மணிக்குமேல் கொடியிறக்கத்துடன் ஆவணி பிரம்மோற்ச விழா நிறைவுபெறுகிறது.