திருநெல்வேலி: குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை 5.45மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இலஞ்சியில்இருந்து திருவிலஞ்சிகுமாரரை அழைத்து வரும் வைபவம் நடந்தது. 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி நான்கு தேர்களின் தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி காலை 9.30 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 16ம் தேதி காலை 10 மணிக்கு சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.18ம் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி மற்றும் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது.