பதிவு செய்த நாள்
17
நவ
2015
02:11
சாதுர்யமாகப் பேசும் திறன் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
சுக்கிரன் நவ.30 வரை நற்பலன் வழங்குவார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். டிச. 1 முதல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். மாதம் முழுவதும் கேது நன்மை வழங்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். டிச.1ல் புதன், இடம் மாறுவதால் தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். மாதத் தொடக்கத்தில் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் பகைவரால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் சலுகை பெறுவதில் தாமதம் ஏற்படும். புதிய தொழில் முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். டிச.1க்கு பிறகு கோரிக்கை நிறைவேறும்.
கலைஞர்கள் மாதத் தொடக்கத்தில் முன்னேற்றம் காணலாம். நவ. 30 க்கு பிறகு, புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பின்பற்றினால் முன்னேற்றம் காணலாம். போட்டியில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். விடாமுயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கை கூடாமல் போகலாம்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்க வாய்ப்புண்டாகும்.
நல்ல நாள்: நவ. 19, 20, 21, 22, 26, 27, 30 , டிச. 1, 7, 8, 9,10,11
கவன நாள் : டிச. 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7
நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சனியன்று சனீஸ்வரருக்கு எண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட தவறாதீர்கள்.