பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
விழுப்புரம்: பெரியகுடுமியான்குப்பம் கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இளங்காடு மதுரா பெரியகுடுமியான்குப்பத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அதனையொட்டி நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு, 8:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 8:45 மணிக்கு கற்பகவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதில், அறங்காவலர்கள் சண்முகம், கிருஷ்ணன், கணேசமூர்த்தி, வெங்கடேஷ், தமிழ்நாடு- புதுவை நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் சுப்ரமணியன், இந்து சமய அறநிலையதுறை ஆய்வாளர் சரவணன், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளைஅப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.