பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
சிங்கம்புணரி: புதூர் ஒன்றியம் வா.புதூர் வண்ணமுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு முன் 1994ல் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பாலாஜி சிவாச்சாரியார் தலைமையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை,கணபதிஹோமம்,வாஸ்து சாந்தி, நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
நேற்று காலை யாகசாலையிலிருந்து 9.30 .மணிக்கு கடம் புறப்பட்டது. 10 மணிக்கு வண்ணமுடைய அய்யனார் பூரண கலாதேவி,புஷ்கலா தேவி கோபுர நன்னீராட்டு, விநாயகர், மலையரசிஅம்மன், சின்னக்கருப்பர், பெரிய கருப்பர் பரிவார தெய்வங்களுக்கும் நன்னீராட்டு நடந்தது. அதை தொடர்ந்து மூலவர் மகா அபிஷேகம் பட்டுச்சாற்றுதல் தீபாராதனை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., அருணகிரி திருப்பணிக்குழு தலைவர் ஆர்.கோபால், செயலாளர் ராமசாமி,வெங்கடேஷ், பூசாரிபட்டி நாச்சான் குடும்பத்தினர் பங்கேற்றனர். வா.புதூர், பூசாரிபட்டி, செம்மாம்பட்டி,சுள்ளாம்பட்டி கிராம மக்கள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.