தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ராமர் தீர்த்தவாரி.. குவிந்தன பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 10:02
ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
தை அமாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜையும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுணர் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்ருளியதும் தீர்த்தாவாரி நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று பகல் முழுவதும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். இரவு 8 மணிக்கு ஸ்ரீ ராமர், பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடப்பதாக கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார். தை அமாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில், ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.. தமிழகம் முழுவதும் கடற்கரை மற்றும் குளக்கரைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.