உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. பிப். 22 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
இக்கோயில் ராகுகேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள தனி சன்னதியில் ராகுவும் கேதுவும் தம்பதி சகிதமாய் எழுந்தருளியுள்ளனர். கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்ற பெயர் பெற்றது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஆறு ஓடுவதும், அதன் கரையில் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதும் காசிக்கு அடுத்து இங்கு மட்டுமே என்றும் கூறுகின்றனர். இக்கோயில் மாசிமக தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நகரின் எண் திக்கிலும் பூசணிக்காய் அறுத்து படையல்படைக்கப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். சுவாமி, அம்மனும் வீதிஉலா வருவர். பிப்.21ல் திருக்கல்யாணம், பிப். 22 பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.