சேத்துார்: சேத்துார் எக்கலாதேவியம்மன் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இழங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இக் கோயில் விழா கடந்த 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அக்கினிசட்டி ,4 ம் நாள் அம்மன் ரிஷப வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.7 ம் நாளன்று பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து முளைப்பாரி,ஆயிரங்கண் பானை எடுத்து வந்தனர்.நேற்று பொங்கலிடும் நிகழ்ச்சி, இரவில் அம்மன் குடைச்சப்பரத்தில் வீதி உலா வருதல், மஞ்சள் நீராட்டு நடந்தது. ஏற்பாட்டை தலைவர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.