Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி கோவிலில் ... எக்கலாதேவியம்மன் கோயிலில் பூக்குழி விழா எக்கலாதேவியம்மன் கோயிலில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையை சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
திருமலையை சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

பதிவு செய்த நாள்

03 மே
2016
11:05

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையை சுற்றி இரும்பு வேலி அமைத்து வருகிறது.திருமலைக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக, பல ஆண்டுகளாக மத்திய உளவுத்துறை, எச்சரித்து வருகிறது. அதனால், திருமலையில் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், திருமலையை சுற்றி இரும்பு வேலி அமைக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதி அளித்தது. அதன்படி, திருமலையை சுற்றி, 12 கி.மீ., தொலைவு, இரும்பு வேலி அமைக்கும் பணி, 2014ல் துவங்கியது.முதற்கட்டமாக, திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் மலைப் பாதையில், 4.8 கி.மீ., தொலைவு, இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: திருமலையை சுற்றி, இரும்பு வேலி அமைப்பதால், அலிபிரி சோதனைச்சாவடியை கடந்து மட்டுமே, எவராலும் திருமலைக்கு செல்ல முடியும். வன விலங்குகள், திருமலைக்குள் நுழைவதை தடுக்க முடியும். சந்தனக் கட்டை, செம்மரக் கட்டை, மூலிகைகள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.  இரும்பு வேலியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், பாதுகாப்பு மேலும் பலப்படும். இரும்பு வேலி அமைக்கும் பணி முடிந்த பின், அதை சுற்றி ரோந்து பாதை ஏற்படுத்தினால், 24 மணி நேரமும், வனத்துறையினரை, ரோந்து பணியில் ஈடுபடுத்த முடியும். இதன் மூலம், திருமலையின் பாதுகாப்பு முழு அளவில் பலப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar