திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 11:05
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், சீதாசமேத ராமர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள ராமர் சன்னதியில்‚ ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு பெருமாள்‚ தாயார்‚ வேணுகோபாலன் சன்னதிகளில் ராமானுஜர் எழுந்தருளி, மங்கல சாசனம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சேவை சாற்றுமறை‚ பிரசாத வினியோகம் செய்யப்பட்டது. மாலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சீதா சமேத ராமர்‚ லட்சுமணர்‚ ஆஞ்சநேயர் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். தொடர்ந்து 8:00 மணிக்கு சேவை சாற்றுமறை‚ தீபாராதனை‚ தீர்த்தபிரசாத விநியோகம் நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரிய சுவாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.