திருமலை ஏழுமலையானுக்கு தங்க சாலி கிராம மாலை காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 11:05
திருப்பதி: ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர், திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று காலை, 5.50 கிலோ எடையில், தங்கத்தால் செய்யப்பட்ட, இரண்டு சுதர்சன சாலி கிராம மாலையை காணிக்கையாக வழங்கினார்; இதன் மதிப்பு, 1.15 கோடி ரூபாய். இந்த மாலையை, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்சிவ ராவிடம், ராஜேஷ் குமார் அளித்தார். ஒரு மாலையை மூலவருக்கும், மற்றொன்றை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கும் அலங்கரிக்க வேண்டும் என, ராஜேஷ் குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.