மயிலாடுதுறை: தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கை மன்னனால் 45 பாசுரங்களால் மங்கள சாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான தேரழுந்தூர் ஸ்ரீ ஆமருவியப்பன் கோயிலில் வைகாசி திருவோண பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய உற்சவத்தில் தின சரி பெருமாள் இந்திரவிமானம், சூரியப்ரபை, சேஷவாகனம், வெள்ளி கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம் மற்றும் தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார்.முக் கிய விழாவான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தாயாருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் நான்கு மாடவீதிகளின் வழியாக வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானே, ஆமருவியப்பா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழியெங்கும் பக்தர்கள் தங் கள் வீடுகளின் முன்பு கோலமிட்டு, ஆமருவியப்பனுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதில் கோயில் செயல் அலுவலர் பத்ராசலம், இந்து சமய அறநிலைய துறை அலுவலர் கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.