திருவாடானை: தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் சமயபாலா மகன் சந்திரபாலா,16. நேற்று முன்தினம் இரவு துõங்கி கொண்டிருக்கும் போது கனவில் கொலுசு சத்தத்துடன் ஒரு உருவம் வந்தது. வீட்டு கொல்லைபுறத்தில் பூமிக்கடியில் சிலை இருப்பதாக தெரிவித்தது. கனவு குறித்து சந்திரபாலா குடும்பத்தினருக்கு தெரிவித்தார். நேற்று காலையில் கொல்லைபுறத்தில் சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டும் போது ஒரு அடி நீளமுள்ள மண்ணால் செய்யபட்ட காமாட்சி அம்மன் சிலை இருந்தது. சந்திரபாலா குடும்பதினரும், கிராமத்தார்களும் அச் சிலைக்கு தீப, ஆராதனை காட்டி வழிபட்டு வருகின்றனர். சில பெண்கள் சிலையை பார்த்தவுடன் சாமிஆடினர்.