கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் மாலை, காலபைரவருக்கு சிறப்பு பூ ஜைகள் நடந்தது. 16 வகை அபிஷேகம் செய்து, அரளி பூமாலையிட்டு, 108 வடை மாலை சாற்றி பூஜைகள் செய்தனர். தேங்காய், பூசனிக்காய்களில் தீபம் ஏ்ற்றி பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலசுப்ரமணிய குருக்கள் பூஜைகளை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ச