நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம், நல்லாத்துாரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், பிரார்த்தனை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி பிரார்த்தனை திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏரளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.