திருமலைநம்பி திருப்பதி பெருமாள் சேவையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இளம்வயதில் தொடங்கிய கோயில் பணியை தள்ளாத முதுமையிலும் தளராமல் செய்து வந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருமலைக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து ஆர்வத்துடன் அடிவாரம் வந்தார்.அவரிடம் ராமானுஜர், “இந்த தள்ளாத வயதிலும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? உங்களைவிட சிறியவர் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக்கூடாதா? என்று வாஞ்சையோடு கேட்டார். “திருமலை முழுவதும் தேடிப்பார்த்துவிட்டேன். என்னைவிடச் சிறியவர் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை,. திருமலைநம்பிகளின் இந்தப் பதிலைக் கேட்டு, அவரது கடமையுணர்வையும், பணிவையும் கண்ட ராமானுஜர் மலைத்துவிட்டார்.