பதிவு செய்த நாள்
29
ஜூன்
2016
11:06
கோபி: பச்சமலை முருகன் கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. கோபி பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படும். இதன்படி நேற்று திறந்து எண்ணப்பட்டன. காணிக்கை எண்ணும் பணியில், தனியார் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். மொத்தம், 2 லட்சத்து, 10 ஆயிரத்து, 801 ரூபாய் செலுத்தப்பட்டிருந்து. இதில்லாமல் தங்கம், 15.500 கிராம், வெள்ளி, 48 கிராம், சவுதி அரேபியா ரூபாய் நோட்டு, மலேசியா நாட்டின் ஒரு நோட்டும் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் உண்டியல் திறப்பின்போது, 7 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.