பதிவு செய்த நாள்
29
ஜூன்
2016
11:06
திருப்பதி : திருமலையில், நாதநீராஞ்ஜனம் நிகழ்ச்சியில், பத்ம விருதுகள் பெற்றோருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில், தினமும் மாலையில், ஏழுமலையான் கோவில் முன் உள்ள, நாதநீராஞ்ஜன மண்டபத்தில், நடனம், நாட்டியம், கர்நாடக இசை கச்சேரி, நாமசங்கீர்த்தனம், கதாகாலட்சேபம் உள்ளிட்ட, ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்போர், தேவஸ்தான அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். பத்ம விருதுகள் பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிகளில், பத்ம விருதுகள் பெற்ற இசை, நடன கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; அவர்கள் விருப்பப்படும் நாளில் வந்து நிகழ்ச்சிகளை நடத்தலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.