தாண்டிக்குடி: தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பட்டக்காரர் மங்களகாந்தி, மேலாளார் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.