Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பிள்ளைகளால் பெருமை சகோதர வழியில் நன்மை! சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அரசு வகையில் ஆதாயம் அடிக்கடி வெளியூர் பயணம்!
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அரசு வகையில் ஆதாயம் அடிக்கடி வெளியூர் பயணம்!

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
09:08

உற்சாக மனப்பான்மை கொண்ட கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மையை வாரி வழங்குவார். மற்ற கிரகங்களால் ஓரளவே நன்மையை எதிர்பார்க்கலாம். எந்த செயலையும் முன்யோசனையுடன் மேற்கொள்வது  நல்லது. ஆனால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதத்தில் ஈடுபட நேரிடலாம். எதிலும் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. செப்.13 க்கு பிறகு நிலைமை சீராகி மன நிம்மதி காண்பீர்கள். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளால் வீண் குழப்பம் உருவாகலாம். ஆனால் சுக்கிரனால் ஆக.26க்கு பிறகு நிலைமை சீராகும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வீட்டுக்கு தேவையான வசதிகள் குறைவின்றி கிடைக்கும். ஆக. 25,26 ல் உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் செப். 5,6,7 ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆக. 29,30, 31ல் பெண்களால் நன்மை உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் சுக்கிரனால் மாத முற்பகுதியில் லாபம் பெருகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். வங்கி நிதியுதவியால் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலாளர் ஒத்துழைப்பும் வளர்ச்சிக்கு துணை நிற்கும். சூரியனால் போட்டியாளர்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடும். ஆனாலும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை உண்டாகாது. செப். 10,11,12 ல் தொழிலில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆக.27,28, செப். 1,2 ல் முயற்சியில் தடை குறுக்கிடலாம்.

பணியாளர்கள் அதிக பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகாது. பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். ஆக.23,24ல் எதிர்பாராத வகையில் வருமானம் வந்து சேரும். அரசு
பணியாளர்களுக்கு சுக்கிரனால் மாத முற்பகுதியில் கோரிக்கை நிறைவேறும். ஆக.26க்கு பிறகு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்க
பெறுவீர்கள். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். தொழில்
ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த சீரான பலனைக் காண்பர். பணப்புழக்கத்திற்கு எந்த குறைவும் இருக்காது. செப்.8,9ல் வீண் மனக்குழப்பம் உருவாகலாம் கவனம்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். குறிப்பாக கரும்பு, எள், கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்களின் முடிவு சுமாராக இருக்கும். புதிதாக நிலம் வாங்க சிலகாலம் பொறுத்திருக்க நேரிடும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் தனி அந்தஸ்துடன் இருப்பர்.வேலைக்கு செல்லும் பெண்கள் விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். செப்.3,4 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்குவீர்கள்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். ஆகஸ்டு 17,18, செப்டம்பர்13,14 சிறப்பான நாட்களாக அமையும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். கண் தொடர்பான உபாதை ஏற்பட வாய்ப்புண்டு.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு ஆக.17,18,23, 24,25,26,29,30,31, செப்.3,4,10,11,12,13,14 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு  துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான கும்பத்தில் சந்திரன் ஆக.19,20, செப்டம்பர் 15,16 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, செந்துõரம்

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு வாருங்கள். முருகன் கோவிலுக்கும் செல்வது நல்லது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar