பதிவு செய்த நாள்
27
ஆக
2016
11:08
திருவள்ளூர்: கோகுலாஷ்டமியை ஒட்டி, திருவள்ளூர் நகரின் பல்வேறு இடங்களில், உறியடி திருவிழா நடந்தது.ஆவணி அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்ததால், கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் கோகுலாஷ்டமியை ஒட்டி, திருவள்ளூர் நகரில் உள்ள பெருமாள் கோவில்களில், கோலாகலமாக உறியடி விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளுர் பூங்காநகரில் உள்ள சிவ- - விஷ்ணு கோவிலில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்றிரவு நடந்த உறியடி திருவிழாவில், சிறுவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அதே போல், திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஆனந்த சாய்ராம் கோவில்; கிழக்கு குளக்கரை கிருஷ்ணர் கோவில்; காமராஜர் சிலை அருகில், உறியடி திருவிழா நடந்தது. மேலும், பல்வேறு இடங்களில் நடந்த கோகுலாஷ்டமி விழாவில் குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து, காண்போரை கவர்ந்திழுத்தனர்.