Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

பதிவு செய்த நாள்

03 செப்
2016
12:09

ஒழுக்கத்தை உயிராக மதித்து வாழும் அன்பர்களே! (சொத்து வாங்குவீங்க)

செவ்வாய், ராகு மாதம் முழுவதும் நற்பலன் அளிக்கும் நிலையில் உள்ளனர். புதன் செப்.29 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் செப்.19ல் சாதகமான இடத்துக்கு மாறுவதால் நன்மை மேலோங்கும். தெய்வ அருளால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். முக்கிய பொறுப்புகளை பெண்களின் வசம் ஒப்படைத்தால் நன்மை உண்டாகும். வீண் செலவை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். சகோதர, சகோதரிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவியிடையே ஒற்றுமை நிலவும். செப்.19க்கு பிறகு பெண்களால் பொன், பொருள் சேரும். செப்.28,29ல் உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். அதே நேரம் அக்.10, 11ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஒதுங்கி இருக்கவும்.

தொழில், வியாபாரிகள் சீரான முன்னேற்றம் கிடைக்கப் பெறுவர். உழைப்புக்கு தகுந்த ஆதாயம் கிடைக்கும். செப்.19க்கு பிறகு விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். வியாபாரிகள் அரசு வகையில் சலுகை கிடைக்கப் பெறுவர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்.17,18, அக்.14,15,16ம் தேதிகளில் பணவரவை எதிர்பார்க்கலாம்.

செப்.29க்கு பிறகு போட்டியாளர்களால் தொல்லை உருவாகலாம். பணியாளர்கள் வெகுவாக முன்னேற்றம் காண்பர். விண்ணப்பித்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு படிப்படியாக குறையும். செப்.19 க்கு பிறகு சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப்.26,27ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். சூரியனால் பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பதவி உயர்வுக்கு தடை உண்டாகாது.

கலைஞர்கள் நல்ல பலனைக் காணலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள்.
செப்.19க்கு பிறகு அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நல்ல முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். கல்வியில் சிறப்பான வளர்ச்சி காணலாம். செப்.29க்கு பிறகு அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.

விவசாயிகள் நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறலாம். குறிப்பாக நெல், கோதுமை, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் வந்து சேரும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நிலப்பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் விரைவில் கைகூடும்.

பெண்கள் குடும்ப வளர்ச்சிக்கு துணை நிற்பர். ராகுவால் பொன், பொருள் சேரும்.
உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் உண்டு. அக்.8,9ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். தாய் வீட்டில் இருந்து பரிசு, சீதனம் கிடைக்கும். அக். 19,20ம் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும்.
சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் பணியாளர்கள் சிறப்பான பலனைப் பெறுவர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. செப்.23,24,25ல் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு செப். 17,18,19, 20,26,27,28,29, அக்.3,4,8,9,14,15,16
ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான ரிஷபத்தில் சந்திரன் செப். 21,22 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 3,6 நிறம்: சிவப்பு, நீலம்

பரிகாரம்:சனிக்கிழமை பெருமாளையும், வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். தினமும் காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.  புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். ராகு காலத்தில் அம்மன் கோவிலில் தீபமேற்றி வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar