பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி மலையப்பன் அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் அருள்பாலித்து வருகிறார். புரட்டாசி மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்யபடி பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் 12:00 மணிக்குள் உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.